Saturday, April 17, 2010

உன்னை பற்றி..

மோதலில் ஆரம்பித்தது நம் நட்பு
ஆதலினால் தான்..
மோதலால் வளர்கிறது நம் நட்பு.

நமக்குள்ளே நெருக்கத்தை ஏற்படுத்தியது
நம் உரையாடல்கள் அல்ல,
நம் மௌன நிமிடங்கள்.

எப்பொழுது என்னிடம் உனக்கு நம்பிக்கை வந்தது? - ஒரு நாள் அவளிடம் கேட்டேன்.
அவள் சொன்னால்,நான் பார்க்காத பொழுதும்,
என் கண்களை பார்த்து நீ பேசிய பொழுது!

தனிமை..
உன்னை பார்காத பொழுது தோன்றவில்லை.
உன்னை பற்றி நினைக்காத பொழுது தொற்றிக்கொண்டது.

நம் முதல் சந்திப்பு
நம் முதல் பரிசு
நம் முதல் மோதல்
நம் முதல் கோபம்
இப்படி..
எந்த முதலும் நினைவில் இல்லை.
ஆனால், நம் முதல் பிரிவு மட்டும்,
நினைக்க மறந்தும் முடியாமல்.

Friday, April 2, 2010

தேவதைப் பெண்

சக மனிதர்கள் பெயர் சொல்லி கேட்டதுண்டு.
அன்று நீ சொல்லி, உன்பெயர் கேட்ட பொழுது,
உணர்ந்தேன் -
தேவதைகள் மனித மொழி பேசும் என்று!!!

ஒரு நாள், யாரும் இல்லாத அந்த வீட்டில்,
நாம் இருவர் மட்டும் தனிமையில்.
நீ பேசுவதை கேட்க, என்னோடு வந்தமர்ந்தார் கடவுள்.
" உங்களுக்கு இங்கு என்ன வேலை?" என்று நான் கேட்க,
கடவுள் சொன்னார்,
" நான் படைத்த கவிதை, இங்கு கவிதை பேசுகிறது. எத்தனை கடவுளுக்கு கிடைக்கும் இந்த பாக்கியம்?"

சில நினைவுகள்

என்னை பார்த்த பெண்களில்,
என்னை படித்த பெண் நீ!

நட்புக்குள் அடங்காது நம் உறவு,
உன்னால் முழுமை பெற்ற அரைபுள்ளி நான்.

தொட்டு விடும் தூரத்தில் நீ...
பற்றி கொள்ளும் வேகத்தில் நான்...
தடையாய் நாம் !!!

நம் முதல் சந்திப்பில்,
உன்னை கண்டவுடன் பிடிதிடவில்லை-
உன்னில் என்னை கண்டவுடன் பிடித்தது.